மதுரை வளையங்குளத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிமுக மாநாடு மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது. இதற்காக தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் வருகை தந்திருந்தனர். இந்நிலையில் மாநாட்டில் தொண்டர்களுக்கு உணவு வழங்க புளியோதரை மற்றும் சாம்பார் சாதம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் புளியோதரை மற்றும் சாம்பார் சாதம் தரமற்ற முறைகளும் சரியாக வேகாமலும் இருந்ததால் தொண்டர்கள் வாங்கி சாப்பிடாமல் கீழே கொட்டினர்.

இந்த உணவை யாரும் வாங்காததால் மாநாட்டு பந்தலில் சுமார் ஒரு டன் அளவிற்கு சமையல் செய்த புளியோதரை மற்றும் சாம்பார் சாதம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து சுகாதாரம் குறித்து பெரும் சர்ச்சை எழுந்த நிலையில் அதிமுகவினர் நேற்று நள்ளிரவில் புள்டோசர் மூலம் குழிதோண்டி வீணான உணவுகள் அனைத்தையும் மண்ணை அள்ளிப்போட்டு மூடினர்.