மணிப்பூரில் பெண்கள் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து திமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக மகளிர் அணி சார்பில் 23ஆம் தேதி சென்னையில் கனிமொழி எம்.பி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும், ஜூலை 24ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் திமுக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தாய்மையை நிர்வாணப்படுத்தி தலை குனிய வைத்த மணிப்பூர் கொடூரத்தை தடுக்க தவறிய ஒன்றிய அரசை கண்டித்து திமுக மகளிரணி துணை பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.