பீகார் மாநிலம் பெகுசராயில் உள்ள ஒரு நடுநிலைப் பள்ளியில், இரண்டு ஆசிரியர்களுக்கு மணப்பெண் பாணியில் பிரியாவிடை அளித்த அபூர்வ நிகழ்வு சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அமிதா குமாரி மற்றும் ராஜ்ஹான்ஸ் குமார் ஆகிய இருவரும் பீகார் பொது சேவை ஆணையம் மூலம் தலைமை ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டு, பிற பள்ளிகளில் புதிய பொறுப்புகளை ஏற்கவிருந்தனர். ஆகஸ்ட் 7, 2025 அன்று நடைபெற்ற இந்த பிரியாவிடை விழாவில், அமிதா குமாரி பாரம்பரிய சுனாரி அணிந்து, ‘கோய்ச்சா பராய்’ (பரிசுகளால் மடியை நிரப்புதல்) மற்றும் ‘சுமாவான்’ (ஆசீர்வாதங்களை விரும்புதல்) போன்ற மணப்பெண் சடங்குகள் செய்யப்பட்டது.
மாணவர்கள் மலர் இதழ்களை தூவி, மணமகள் வீட்டை விட்டு செல்லும் நெகிழ்ச்சியான தருணத்தைப் போல் சூழ்நிலையை அமைத்தனர். ராஜ்ஹான்ஸ் குமார் மணமகன் போன்று அலங்கரிக்கப்பட்டு, நிகழ்ச்சிக்கு சிறப்பு சேர்த்தார். “ஒரு ஆசிரியருக்கு இப்படிப்பட்ட பிரமாண்டமான பிரியாவிடை அளிக்கப்படுவது அரிது. இன்று அந்த நல்லுறவின் ஒரு சிறிய காட்சியை கண்டோம்” என்று முதல்வர் ஸ்ரீகிருஷ்ணா தாஸ் தெரிவித்தார். கலைப் பயிற்றுவிப்பாளர் உபேந்திர சவுத்ரி, “இத்தகைய கருணையுடன் கூடிய பிரியாவிடைகள் பீகாரின் பெருமையை காட்டுகின்றன” என்றும் பாராட்டினார்.
நன்றியுணர்வின் அடையாளமாக, இரு ஆசிரியர்களுக்கும் பாரம்பரிய உடைகள், டைரிகள், மாலைகள், பேனாக்கள் மற்றும் மலர் பூங்கொத்துகள் வழங்கப்பட்டன. வழக்கமான பிரியாவிடையைத் தாண்டி, ஆசிரியர்களுக்கும் பள்ளி சமூகத்திற்கும் இடையிலான குடும்ப பாசம், பாரம்பரியம் மற்றும் மரியாதையை வெளிப்படுத்திய இந்த நிகழ்வு, தற்போது சமூக ஊடகங்களில் பெரும் வரவேற்பைப் பெற்று, பலரின் பாராட்டுக்களையும் குவித்துள்ளது.
Watch: Teachers Get Unique Bride-Like Farewell In Bihar pic.twitter.com/jNCoAi1v1r
— Mansi Jagani (@j_mansi) August 7, 2025
