மக்னா யானை மூர்த்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செய்தி கேட்டு வருத்தமடைந்ததாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், இயற்கையின் சமநிலைக்கும் காட்டை உருவாக்குவதற்கும் யானைகளின் பங்கு என்பது அதிகம். நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் சிகிச்சை பெற்று வந்த 60 வயது மக்னா யானை மூர்த்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செய்தி கேட்டு மிகவும் வருத்தம்அடைத்தேன். யானையை வளர்த்து பராமரித்த யானைப்பாகர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். யானைகளின் நலனைக் காப்போம், இயற்கை காப்பாற்றுவோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.