தேமுதிக தலைவர் விஜயகாந்த் சுமார் 20 நாட்களுக்கு மேலாக உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அவர் வீடு திரும்பியதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. இதனை தொடர்ந்து சென்னையில் நாளை மறுநாள் டிசம்பர் 14ஆம் தேதி தேமுதிக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த கூட்டத்தில் விஜயகாந்த் பங்கேற்க உள்ளார்.

நீண்ட நாட்கள் கழித்து கட்சியை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், மக்களை சந்திக்கும் விஜயகாந்த், நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து முக்கிய முடிவை எடுக்க உள்ளார். மேலும் பிரேமலதாவுக்கு கூடுதல் பொறுப்பு மற்றும் விஜய பிரபாகரனுக்கு புதிய பதவி வழங்குவது குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாக உள்ளது.