சுற்றுலா செல்வதற்கும், வர்த்தகத்திற்கும் தலைசிறந்த இடம் துபாய் என்பதில் சந்தேகமே கிடையாது. பொதுமக்கள், தொழில்துறையினர்  ஈர்க்கும் விதமாக ஷாப்பிங் திருவிழாவானது அங்கு வருடம் தோறும் நடைபெற்று வருகிறது. இந்த முறை 29 வது வருடமாக ஷாப்பிங் திருவிழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி  டிசம்பர் எட்டாம் முதல் ஜனவரி 14 2024 வரை இந்த ஷாப்பிங் திருவிழா துபாயில் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை துபாய் திருவிழா மற்றும் சில்லறை வர்த்தக நிறுவனம் செய்து வருகிறது. இதில் உள்நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் வெளிநாட்டை சேர்ந்தவ ர்களும் கலந்து கொள்ளலாம்.

ஷாப்பிங் திருவிழாவில் அரபு உலகில் இசை ஜாம்புவான்களாக கருதப்படும் அஹலம் அல்ஹாம்சி   போன்றவர்கள் பங்கு பெற்று நேரலை இசை நிகழ்ச்சி வழங்குகிறார்கள். அது தவிர லைப் ஸ்டைல், கலாச்சார நிகழ்வுகள் போன்றவையும் நடக்கிறது. பிரத்யேக ஷாப்பிங் அனுபவத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காமெடி ஷோக்களும் நடைபெற உள்ளது.  சிறப்பு அலங்காரங்களும் ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து செல்பவர்கள் துபாயின் மழைக்கால சீசனை அனுபவிக்கும் விதமாக வருகை புரியலாம்.