கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் இதுவரை 11.85 லட்சம் குடும்ப தலைவிகள் மேல்முறையீடு செய்துள்ளனர். ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பணம் வராத பலரது விண்ணப்பங்கள் கள ஆய்வில் உள்ளது. இந்நிலையில், விண்ணப்பதாரர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு விபரங்களை சரிபார்க்கும் பணியில் அரசு ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

அது உறுதியானால் இந்த மாதம் உரிமைத் தொகை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக விண்ணப்பதாரர்களிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, வரும் நவம்பர் 25-ம் தேதி முதல், தகுதியானவர்களின் செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும் என தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.