மத்திய வங்கக் கடல், வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் நாளை மோக்கா புயல் உருவாக இருப்பதால், இன்று(மே 8) முதல் மே 10 வரை தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதே சமயம் மே 9, 10, 11 ஆகிய நாட்களில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.