கர்நாடகாவில் மே 10ம் தேதி வாக்குப்பதிவும், மே 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது. இதனை  முன்னிட்டு பாஜக, காங்கிரஸ் கட்சிகள் பரப்புரையை தீவிரப்படுத்தியுள்ளன. பரப்புரை செய்து வரும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல், மீனவர்களுடன் உரையாடினார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், மீனவர்களுக்கு 10 லட்சம் காப்பீடு வழங்கப்படும் என உறுதியளித்தார்.

அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்றும் வாக்குறுதி கொடுத்துள்ளது காங்கிரஸ். மேலும்  கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்கும் நாளில் இருந்து, அரசுப்பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் எனவும் மங்களூர் தேர்தல் பரப்புரையின் போது ராகுல்காந்தி வாக்குறுதியளித்துள்ளார்.