
இந்த வருடம் காலநிலை மாற்றத்தால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு வேகமாக பரவி வருவதாக பொது சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கு அரசு சார்பில் மாநிலம் முழுவதும் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. பருவமற்ற காலங்களில் பெய்யும் மழையால் ஆங்காங்கே தேங்கும் நீரில் ஏடிஎஸ் வகை கொசுக்கள் அதிகளவில் உற்பத்தி ஆகின்றன.
பகல் நேரத்தில் கடிக்கும் இந்த வகை கொசுக்கள் தான் டெங்கு காய்ச்சல் பரவுவதற்கு முக்கிய காரணம். கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை 4000 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக கடந்த மூன்று நாட்களில் மட்டும் 30 பேர் டெங்கு காய்ச்சலால் பாதித்துள்ளனர். இதனால் உள்ளூர் நிர்வாகத்துடன் இணைந்து அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.