தமிழகத்தில் போலி மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல்கள் கிடைத்ததைத்தொடர்ந்து போலி மருத்துவர்களை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர். அந்தவகையில் மாநிலம் முழுவதும் கடந்த 3 நாட்களில் நடத்தப்பட்ட சோதனையில்  காவல் துறையினர் 51 போலி மருத்துவர்களை கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் அதிகபட்சமாக 15 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அனைத்து மாவட்ட எல்லைகளிலும் சட்ட விரோதமாக போலி டாக்டர்கள் இருப்பதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் போலி டாக்டர்களை கண்டறியும் பணியினை விரைவுபடுத்த சுகதாரத்துறை செயலர் உத்தரவிட்டுள்ளார்.