ஐபிஎல் போட்டிகளை காண எம்.எல்.ஏ-க்களுக்கு பாஸ் வழங்க வேண்டும் என சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி கோரிக்கை வைத்துள்ளார்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளை காண அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு பாஸ் தேவை என எஸ்.பி.வேலுமணி கோரிக்கை வைத்துள்ளார்.  இதுகுறித்து மேலும் பேசிய அவர், கடந்த அதிமுக ஆட்சியில், எம்.எல்.ஏ.-க்களுக்கு 400 ஐபிஎல் பாஸ் வரை கொடுக்கப்பட்டதாக கூறினார்.

மேலும், தற்போது அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு பாஸ் வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் அதிமுக எம்.எல்.ஏ. எஸ்.பி.வேலுமணி கோரிக்கை வைத்துள்ளார்.