
நாடு முழுவதும் இன்று தென் மாநிலங்களில் எல்பிஜி கேஸ் டேங்கர் லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளது. அதாவது எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
அதன்படி இன்று தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற இருக்கிறது. இந்த தகவலை தென் மண்டல எல்பிஜி கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சுந்தரராஜன் தெரிவித்துள்ளார். மேலும் இன்று வேலை நிறுத்த போராட்டம் நடைபெற இருப்பதால் இன்று கேஸ் சிலிண்டர் கிடைப்பதில் பெரும் தட்டுப்பாடு ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.