நாட்டு மக்களுடைய உள்ளத்தில் தேச பக்தி உணர்வை ஏற்படுத்தும் விதமாக சுதந்திரத்தின் அமிர்த பெருவிழாவில் இல்லங்கள் தோறும் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. அதன்படி கடந்த 2022 ஆம் வருடம் 23 கோடி குடும்பங்கள் தங்களுடைய வீடுகளில் தேசிய கொடியை ஏற்றினார்கள்.

இந்த ஆர்வத்தையும் தேசபக்தியையும் தொடரும் விதமாக இந்த வருடம்  76ஆவது சுதந்திரதினம் இன்று (ஆக.15ஆம் தேதி) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தேசியக் கொடி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி அரசு அதிகாரிகள், ஊழியர்கள் தங்களது வீடுகளில் தேசியக் கொடியினை ஏற்ற அறிவுறுத்திய மத்திய கலாசார அமைச்சகம், தேசியக் கொடியுடன் நின்று செல்ஃபி எடுக்கவும், அதனை hargartiranga.com என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவும் உத்தரவிட்டுள்ளது