சென்னையில் மெட்ராஸ் ஐ பரவல் அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். குடும்பத்தில் ஒருவரை பார்த்தாலே குடும்பம் முழுவதும் அது பரவ வாய்ப்புள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சொட்டு மருந்துகளை மட்டுமே பயன்படுத்தவும். சென்னையில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் செப்டம்பர் 16 முதல் 25ஆம் தேதி வரை மாணவர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்படும் என்று அமைச்சர் அறிவித்துள்ளார்.