மகளிருக்கு ரூ.1000 உதவித்தொகை அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 14 ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில் இந்த திட்டத்திற்கான பணிகளை அரசு தொடங்கியுள்ளது. இதற்கான டோக்கன், மற்றும் விண்ணப்ப விநியோகம் ஜூலை 20ஆம் தேதி முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மகளிர் உரிமைத் தொகைக்காக விண்ணப்பிக்க உள்ளவர்கள் கடைசி நேரத்தில் ரேஷன் அட்டையில் உள்ள தங்களின் குடும்ப உறுப்பினர்களின் பெயர்களை பிரித்து இரண்டு ரேஷன் அட்டைகளாக மாற்றும் எந்த ஒரு முயற்சியும் செய்யாதீர்கள்.

ஏனெனில் இது தேவையற்ற சிக்கலை ஏற்படுத்தும். உங்களுக்கு கொடுக்கும் விண்ணப்பத்தை ஜெராக்ஸ் எடுத்து யாரிடமும் பகிர வேண்டாம் அப்படி செய்தாலும் அது செல்லாது. ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் ஒரு தனித்துவமான எண் இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.