உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத். “முதலமைச்சர் அலுவலகம், உத்தர பிரதேசம்” என்ற பெயரில் வாட்ஸ்அப் சேனலை தொடங்கி உள்ளார். இந்த வாட்ஸ்அப் சேனல் மூலம், பொது மக்கள் தங்களது கருத்துக்கள், குறைகளை முதல்வர் அலுவலகத்தில் முறையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் நேரடியாக முதலமைச்சர் அலுவலகத்தை தொடர்பு கொள்ள முடியும்.  இதன்மூலம் நாட்டிலேயே வாட்ஸ் ஆப் சேனல் தொடங்கிய முதல் முதலமைச்சர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

மேலும் இதுகுறித்து முதலமைச்சர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ X  தலத்தில், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்-க்கு உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த 25 கோடி பேரும் ‘ஒரே குடும்பம்’. முதலமைச்சரின் தலைமையில், உத்தர பிரதேச அரசங்கம் ‘குடும்பத்தின்’ ஒவ்வொருத்தர் நலம் மற்றும் வளர்ச்சிக்காக பணியாற்றி வருகிறது.  என்று குறிப்பிடப்பட்டுள்ளது.