நாடாளுமன்ற மக்களவையில் அத்துமீறி நுழைந்த 2 பேர், கலர் புகைக்குண்டுகளை வீசிய சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.  இந்நிலையில் மக்களவையில் கலர் பாம் வீசியதற்கு பாதுகாப்பு குறைப்பாடே காரணம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், நாடாளுமன்ற தாக்குதலுக்கு பிறகு கடந்த சில ஆண்டுகளாக அங்கு பாதுகாப்பு மிக கடுமையாக்கப்பட்டிருந்தது. இருந்தும் இவ்வாறு நடந்திருப்பது பாதுகாப்பில் ஏற்பட்ட கோளாறாகவே பார்க்க வேண்டி உள்ளது. இதுதொடர்பாக தீவிர விசாரணை தேவை என்று தெரிவித்துள்ளார்.