ராஜஸ்தான் மாநிலம் பாலி பகுதியில் வசித்து வருபவர் ஷிவ்லால் மேக்வால். இவருக்கு திருமணம் முடிந்த இரண்டு மகள்கள் உள்ள நிலையில் கடந்த 12 வருடங்களாக தனது குடும்பத்தினரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவரது குடும்பத்தினர் குஜராத்தில் வசித்து வருகின்றனர்.

பாலி ப்பகுதியில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்க ஷிவ்லால் மேக்வால் குடும்பத்தினர் வந்துள்ளனர். அப்போது தனது இரண்டு மகள்களையும் தன்னுடன் வருமாறு அழைத்துச் சென்றுள்ளார். அதன் பிறகு ஒரு இடத்தில் இளைய மகளை நிற்க சொல்லிவிட்டு மூத்த மகளுடன் நடந்து சென்றுள்ளார்.

அங்கு ஆள் நடமாட்டம் இல்லை என்பதை தெரிந்து கொண்ட அவர் தனது மகளின் கழுத்தை அறுத்துவிட்டு அவரை எரித்துள்ளார். இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வழக்கு பதிந்து தப்பிச்சென்ற ஷிவ்லால் மேக்வாலை தேடி வருகின்றனர். தான் தனது குடும்பத்தை விட்டு பிரிந்து இருந்ததற்கு தனது மூத்த மகள்தான் காரணம் என்று அவர் நினைத்ததால் இத்தகைய செயலில் ஈடுபட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.