இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் மீரா கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். எப்போதும் கலகலப்பாக இருக்கும் விஜய் ஆண்டனி இந்த சம்பவத்தால் உடைந்து போனார். இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை மதியம் மீராவின் இறுதி சடங்குகளை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்ற விஜய் ஆண்டனி அதன் பிறகு வெளியே வரவே இல்லை என்ற சினிமா வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது. திரை பிரபலங்கள் பலரும் அவருக்கு ஆறுதல் சொல்ல வீட்டுக்கு சென்றால் கூட அவரை பார்ப்பது சிரமமாக இருக்கிறது என்று கூறினார்.