உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள கஜு மாவட்டத்தில் சர்வஜித் திவாகர் என்ற 22 வயது இளைஞர் வசித்து வந்துள்ளார். இவருடைய அம்மா சங்கீதா (49). இதே கிராமத்தில் சாந்தி தேவி (50) என்ற பெண் தன்னுடைய மகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சாந்தி தேவி தன்னுடைய மகளுடன் திவாகர் தகாத உறவில் இருப்பதாக சந்தேகப்பட்டுள்ளார். இதனால் தன்னுடைய 20 வயது மகன்களான ஷ்ரவன் மற்றும் ஷானி ஆகியோரை நேற்று முன்தினம் திவாகர் வீட்டிற்கு சாந்தி அழைத்துச் சென்று அங்கு தகராறு செய்தார். தகராறு முற்றிய நிலையில் அவர்கள் திவாகரை தாக்க இதனை தடுக்க வந்த சங்கீதாவையும் அவர்கள் தாக்கினர். சங்கீதா மற்றும் திவாகர் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் பின்னர் அவர்கள் மூன்று பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

இது குறித்த தகவலின் பேரில் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று காயம் அடைந்த இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ஷ்ரவனை கைது செய்த நிலையில் மற்றவர்களை வலை வீசி தேடி வருகிறார்கள். மேலும் இந்த விவகாரத்தில் இரண்டு போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.