தகுதி உள்ள மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மொத்தம் 1 கோடியே 13 லட்சத்து 84 ஆயிரத்து 300 மகளிருக்கு, நவம்பர் மாதத்திற்கான உதவித் தொகையை கடந்த 10ம் தேதி வழங்கப்பட்டது. இந்நிலையில், அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து குடும்ப தலைவிகளுக்கு மாத தொடக்கத்தில் ரூ.1,000 வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இதன் மூலம் குடும்ப தலைவிகள் வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்கள் உள்பட வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்க பயனுள்ளதாக இருக்கும் என கூறப்படுகிறது.