மகரம் ராசி அன்பர்களே,

இன்று கடந்து வந்த பாதையில் ஏற்பட்ட சிக்கல்கள் பரிபூரணமாக விலகிச் செல்லும். சுப விரயங்கள் ஏற்படும் நாள் என்று சொல்லலாம். இனிய செய்திகள் வீடு தேடி வரும். வாழ்க்கை தேவைகளை பூர்த்தி செய்ய நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பொது வாழ்க்கையில் புகழ் அதிகரிக்கும். இன்று இல்லத்தில் ஒற்றுமையான சூழல் நிலவும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

இன்று பிள்ளைகளிடம் கவனமாக நடந்து கொள்ளுங்கள். அன்பாக பேசுவது நல்லது. நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் சாமர்த்தியமாக பேசி வளர்ச்சியை காணலாம். அடுத்தவர்களின் ஆலோசனையை ஏற்கும் போது கவனமாக இருங்கள். பெண்கள் சொந்த முயற்சியால் வெற்றி பெறுவீர்கள். சுய அந்தஸ்து  மேலோங்கும். கனவுகள் நினைவாகும். கற்பனை திறன் அதிகரிக்கும். மாற்றுக் கருத்து உடையவர்கள் மனம் மாறக்கூடும்.

இன்று திறமையால் வெற்றி பெறுவீர்கள். இன்று பல முகத்தன்மை கொண்டு வெற்றி வாகை சூடுவீர்கள். இன்று மாணவர்கள் பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளும் நாளாக இருக்கும். முயற்சியால் வெற்றி காண்பீர்கள். கல்வி மீது அக்கறை அதிகரிக்கும். இன்று முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை :  தெற்கு

அதிர்ஷ்ட எண்  :  ஐந்து மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்  : சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்