உத்தரபிரதேசம் மாநிலத்தில் தந்தை ஒருவர் தன்னுடைய மகனை கடனுக்காக விற்பனை செய்ய நினைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உபி மாநிலம் அலிகார், காந்தி பூங்கா பகுதியில் சாலையோரமாக மனைவி, 2 பிள்ளைகளுடன் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் அமர்ந்திருந்தார். அவர் தனது கழுத்தில், என் மகன் விற்பனைக்கு என்று எழுதிய போர்டை மாட்டியிருந்தார்.

இதுகுறித்து அவரிடம் கேட்டதற்கு,”தனக்கு 8 லட்சம் வரை கடன் இருப்பதாகவும், அதில், ரூ.50 ஆயிரம் கடனை திருப்பிக் கேட்டு உறவினர் நெருக்கடி கொடுக்கிறார். தனக்கு வேறு வழியில்லாததால் மகனை விற்பனை செய்கிறேன்” என்றார்.