மத்திய பிரதேசம் மாநிலம் பர்வானி மாவட்டத்தில் உள்ள ராஜ்பூர் நகரில் போலியான ஜாதி சான்றிதழ் மூலம் அரசுப்பணிகள் வழங்கப்படுவதை எதிர்த்து 29 ஆண்கள் நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கையில் பாதகைகளுடன் உடலில் ஒட்டு துணி இல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்ட இவர்கள் அந்த வழியாக அரசு அதிகாரிகளின் வாகனங்கள் சென்றால் அதன் பின்னால் ஓடி அவர்களின் கவனத்தை ஈர்க்க முயற்சித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் கூறுகையில் “எஸ்சி, எஸ்டி வகுப்பை சார்ந்தவர்கள் அரசின் கவனத்தை பெற சாலையில் நிர்வாணமாக ஓட வேண்டிய நிலை சோகத்தை அளிக்கிறது” என தெரிவித்துள்ளார்