உத்தரகாண்ட் முதல்வர் வருகையின் பொழுது செல்போனில் பேசியபடியே சல்யூட் அடித்த போலீஸ் அதிகாரி ஒருவர்  இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். முதல்வர் புஷ்கர் சிங் தாமி, ஆகஸ்ட் 11ஆம் தேதி கோட்வாரில் பேரிடர் பாதித்த பகுதிகளுக்கு பாரவையிட சென்றபோது, ​​ஏஎஸ்பி சேகர் சூயல் அவரை வரவேற்க வந்தார். அப்போது அந்த அதிகாரி தனது செல்போனில் பேசிக்கொண்டே ஒரு கையால் சல்யூட் அடிக்கும் வீடியோ காட்சிகள் வைரலாக பரவியது.

இது குறித்து உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து இடம் மாற்றம் செய்யப்பட்டார். இது கடுமையான முறைகேடு என்றும், முதல்வரை அவமதிக்கும் வகையில் ஏஎஸ்பி நடந்து கொண்டதாகவும் விமர்சனம் எழுந்தது.