
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவிலில் கோமதி விநாயகம் என்பவர் உதவி அர்ச்சகராக வேலை பார்க்கிறார். இவரது வீட்டில் கும்பாபிஷேக பணிக்காக வந்த அர்ச்சகர்கள் தங்கியுள்ளனர். அதில் சிலர் மது குடித்துவிட்டு வீட்டில் ஆபாசமாக நடனமாடியுள்ளனர்.
அதை கோவில் முன்னாள் அர்ச்சகர் ஹரிஹரனின் மகன் சதுரநாதன் என்பவர் வீடியோ எடுத்து அறநிலையத்துறை அதிகாரிகள் கோவில் நிர்வாக குழுவினருக்கு அனுப்பி வைத்து புகார் அளித்துள்ளார். இதே கோவில் வளாகத்தில் பணிபுரியும் பெண்கள் மீது அர்ச்சகர்கள் விபூதி அடித்து விளையாடும் வீடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
சம்பந்தப்பட்ட அர்ச்சகர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு இந்து முன்னணி சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அர்ச்சகர்கள் கணேசன், வினோத், கோமதி விநாயகம் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.