பாலிவுட் சினிமாவில் கடந்த 1993-ஆம் ஆண்டு ஆக்ஷன் கதைக்களத்தில் உருவான கல்நாயக் திரைப்படம்  மாபெரும் வெற்றி பெற்றது. இந்தப் படத்தில் நடிகர்கள் சஞ்சய் தத், ஜாக்கி செராஃப்  மற்றும் நடிகை மாதுரி தீக்ஷித் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தில் இடம்பெற்ற சோலி கே பீச்சாய் க்யா ஹை திரைப்படம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானது.

இந்தப் படம் வெளியாகி 30 வருடங்கள் ஆகும் நிலையில் தற்போது இயக்குனர் சுபாஷ் இரண்டாம் பாகத்தை எடுக்க இருக்கிறார். இதற்கு கல்நாயக் 2 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இயக்குனர் தற்போது நடிகர்களை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். இதற்காக அவர் நடிகர்கள் ரன்வீர் சிங், ரன்பீர் கபூர், யாஷ், அல்லு அர்ஜுன் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். மேலும் இந்த படத்தின் தயாரிப்பு பணிகள் விரைவில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.