தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பொறியியல் இரண்டாம் ஆண்டு நேரடி மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதற்கான கால அவகாசம் ஏற்கனவே முடிவடைந்த நிலையில் தற்போது மாணவர்களின் நலனை கருதி கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பாலிடெக்னிக் மற்றும் பிஎஸ்சி கணிதத்தை பாடமாகக் கொண்டு பட்டம் பெற்ற மாணவர்கள் பி இ மற்றும் பி டெக் படிப்புகளில் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேர்வதற்காக விண்ணப்ப பதிவு இணையதளம் மூலமாக கடந்த ஜூன் 1ஆம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவடைந்தது. இந்நிலையில் இதற்கான கால அவகாசம் வருகின்ற ஜூலை ஏழாம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.