மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி, சரத்குமார், பிரபு, ஐஸ்வர்யா ராய், திரிஷா உட்பட பலரது நடிப்பில் உருவாகி இருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில், 2ஆம் பாகம் வருகிற ஏப்ரல் 28ம் தேதி திரைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கும் பொன்னியின் செல்வன் 2ஆம் பாகத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் பொன்னியின் செல்வன் 2ஆம் பாகத்தின் இறுதிகட்டப் பணிகள் தாமதமாகி வருவதால் படத்தின் ரிலீஸ் செய்தியை ஆயுதபூஜைக்கு தள்ளிவைக்க பட குழு முடிவு செய்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகியது.

ஆனால் அச்செய்தியை பொன்னியின் செல்வன் படக்குழு திட்டவட்டமாக மறுத்திருக்கிறது. பொன்னியின் செல்வன் 2ஆம் பாகம் அறிவித்தபடி அதே தேதியில் வெளியாகும் என தெரிவித்து உள்ளார்கள். மேலும் இம்மாதம் இந்த படத்தின் முதல் சிங்கிள் வெளியாகும். பின் அடுத்த மாதம் முதல் வாரத்தில் டீசர் வெளியாகும் என சொல்கின்றனர்.