பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை ஆல்யா மானசா. இவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் இனியா தொடரில் நடித்து வருகிறார். இவருடைய கணவர் சஞ்சீவ் கயல் தொடரில் நாயகனாக நடித்து வருகிறார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஆல்யா மானசா அடிக்கடி தன்னுடைய குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் சேர்ந்து எடுத்துக் கொள்ளும் வீடியோவை வெளியிடுவது வழக்கம்.

அந்த வகையில் தற்போது குழந்தைகளுடன் வெளியே சென்ற போது எடுக்கப்பட்ட வீடியோவை ஆல்யா வெளியிட்டுள்ளார். அதில் தன்னுடைய கழுத்தில் உள்ள துப்பட்டாவால் தன்னுடைய மகள் மற்றும் மகனின் கைகளை அவர் கட்டி வைத்துள்ளார். இந்த வீடியோவை பார்தது நெட்டிசன்கள் அவரை வறுத்தெடுத்து வருகிறார்கள். மேலும் குழந்தைகள் இருவரும் தனித்தனியே ஓடினால் துப்பட்டாவால் கழுத்து நெறிப்படும் என்பதால் ஆல்யாவின் செயலுக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

 

 

View this post on Instagram

 

A post shared by alya_manasa (@alya_manasa)