பொதுத்தேர்வு வினாத்தாள் என்ற பெயரில் வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிபிஎஸ்இ எச்சரித்துள்ளது. 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களுக்கு நாளை பொதுத் தேர்வு தொடங்குகிறது. இந்த நிலையில் பொது தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் என்ற பெயரில் போலி வினாத்தாள் பரப்பப்படுவதாக எச்சரித்த சிபிஎஸ்இ, அது தொடர்பாக [email protected] என்ற இமெயில் ஐடிக்கு தகவல் தெரிவிக்குமாறு கூறியுள்ளது.