பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதிக்காக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகமானது முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொங்கல் பண்டிகையை கொண்டாட பொதுமக்கள் பல பேர் சொந்த ஊருக்கு செல்வார்கள்.

அவர்களின் வசதிக்காக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இன்று (ஜன,.13) மட்டும் மாலை 5 மணிமுதல் 10 மணிவரை தேவைப்படும் பட்சத்தில் நெரிசல் மிகுந்த நேரங்களில் 2 வழித்தடங்களிலும் தேவைக்கேற்ப மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். இவற்றில் நீல வழித்தடம் மற்றும் பச்சை வழித்தடம் போன்றவை அடங்கும்.

அத்துடன் ஜன,.18ம் தேதி அனைத்து முனையங்களிலிருந்தும் புறப்படும் முதல் மெட்ரோ ரயில் சேவையானது காலை 5 மணிக்கு பதில் காலை 4 மணி முதல் இயக்கப்படும். எனவே ஜனவரி 13, 14, 18 போன்ற தேதிகளில் பயணிகள் தங்களது பயணத்தை திட்டமிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.