தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகை மிக சிறப்பாக கொண்டாடப்படும் நிலையில் இந்த வருடம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகப்பு வழங்க அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்காக 238 கோடி ரூபாய் நிதி ஒதுக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நடப்பு ஆண்டுக்கான பொங்கல் பரிசு தொகப்பாக அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தல ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்புடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கு அரசு உத்தரவிட்டு உள்ளது. இதற்காக 238 கோடி செலவீனம் ஏற்படும் என்பதால் அந்த நிதியை அரசு ஒதுக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.