தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து பொங்கல் பரிசு தொகப்புடன் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்க 3.31 கோடி இலவச வேஷ்டி சேலைகள் தயார் நிலையில் இருப்பதாக அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு சார்பில் ஆண்டுதோறும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் நிலையில் ஆயிரம் ரூபாய் ரொக்கம் குறித்து அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இதனிடையே 15 ரகங்களில் 1.68 கோடி சேலைகள், ஐந்து ரகங்களில் 1.63 கோடி வேஷ்டிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.