ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமையுடன் சேர்த்து 5 நாட்கள் தொடர் விடுமுறை வருகின்றன.

இந்த நாட்களில் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல இதுவரை 50 ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். இதனால் நாளொன்றுக்கு 5000க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளது. மேலும் ஆம்னி பேருந்துகளின் எண்ணிக்கையும் அதிகப்படுத்தப்படவுள்ளது.