
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே உள்ள பந்தர்பூரில் கோவில் விழா ஒன்று நடைபெற்றது. இங்கு நேற்று டோம்பிலி என்ற கிராமத்து பக்தர்கள் பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். இந்தப் பேருந்தில் மொத்தம் 42 பேர் பயணம் செய்தனர். இந்நிலையில் பேருந்து மும்பை-புனே விரைவுச்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென டிராக்டர் ஒன்று எதிர்பாராதவிதமாக பேருந்தின் மீது மோதியது, இந்த விபத்தில் பேருந்து கவிழ்ந்தது.
இதனால் பேருந்தில் பயணம் செய்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பேருந்தில் பயணம் செய்த 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேருந்தில் சிக்கியவர்களை மீட்டனர். அதன்பின் அவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.