குஜராத் மாநிலம் வாட்சாத் மாவட்டத்தில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. பார்டி கிராமம் அருகே அமத்வாட்டில் இருந்து பெல்கம் நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனே உஷாரான பேருந்து ஓட்டுனர் பேருந்து ஓரமாக நிறுத்திய நிலையில் பேருந்தில் இருந்த 16 பேர் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இது குறித்து உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த ஊழியர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் அங்கு சற்று நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.