பேடிஎம் பேமெண்ட் பேங்கின் நிர்வாக இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான சுரிந்தர் சாவ்லா பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார். பேடிஎம் பேமெண்ட் பேங்க் மீது ஜனவரி 31ஆம் தேதி ரிசர்வ் வங்கி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. டெபாசிட் மற்றும் கடன் பரிவர்த்தனைக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்ட நிலையில் சுரிந்தர் சாவ்லா ராஜினாமா செய்துள்ளார்.