சென்னை பெரும்பாக்கத்தை சேர்ந்த உதயா – சரண்யா தம்பதி கூலி வேலை முடிந்து நேற்று வீடு திரும்பிய போது கதவு உள்பக்கமாக பூட்டியிருந்தது. இதனால் சிறுமியின் பெற்றோர்கள் ஜன்னல் வழியாக பார்க்கையில் மகள் அஸ்வந்தி (8) ஜன்னல் கயிற்றில் மாட்டியிருந்த ஒரு துணி கழுத்தில் சுற்றப்பட்டு கழுத்து இறுக்கிய நிலையில் மயங்கி கிடந்தார்.

இதனை அதிர்ச்சியடைந்த அவர்கள் சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த துயர சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். மேலும் குழந்தைகளை வீட்டில் தனியாக விட வேண்டாம் என அவர்கள் அறிவுரை வழங்கினர்