மத்தியப் பிரதேசம் மாநிலம் சீஹோர் மாவட்டத்தில் உள்ள ஜஹாங்கிர்புரா கிராமத்தில் நடந்த ஒரு சோகமான சம்பவம் அனைவரையும் கலங்கச் செய்துள்ளது. அந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஆயுஷ் லோதி என்ற 1 1/2 வயது குழந்தை, ஜெல்லி சாப்பிட்டபோது, அது மூச்சுக்குழாயில் சிக்கி குழந்தை உயிரிழந்தது.

சம்பவத்தன்று, வீட்டில் இருந்தபோது குழந்தை ஒரு ஜெல்லி சாப்பிட்டது. சாப்பிடும்போது ஜெல்லி தொண்டையில் சிக்கி, குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. பெற்றோர் அவசரமாக குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

சீஹோர் அரசு மருத்துவமனையின் சிவில் சுர்ஜன் டாக்டர் ப்ரவீர் குப்தா கூறுகையில், “ஜெல்லி போன்ற பிசுபிசுப்பான, மென்மையான பொருட்கள் குழந்தைகளுக்கு மூச்சுக்குழாயை தடை செய்யும் அபாயம் உள்ளது. உணவு தொண்டையில் செல்வதற்குள் மூச்சுக்குழாய் மூடுவதற்கான epiglottis எனும் பகுதி சரியாக வேலை செய்யாதபோது, இப்படி மூச்சு அடைப்பு ஏற்படக்கூடும்” என்றார்.

இந்த நிகழ்வைத் தொடர்ந்து, குழந்தையின் குடும்பம் மற்றும் கிராம மக்கள் மிகவும் வேதனையில் மூழ்கியுள்ளனர். “இது மாதிரி இன்னொருவர் குழந்தையுடன் நடக்கக் கூடாது. அந்த ஜெல்லி தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு முழுமையான தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.  ஜெல்லியை விற்ற கடைக்காரியும், “நான் இனிமேல் இந்த ஜெல்லியை குழந்தைகளுக்கு விக்கமாட்டேன்” என்று கூறியுள்ளார்.