நேபாளத்தில் நேற்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அங்கு 157 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதன் காரணமாக நாடே சோகத்தில் மூழ்கியுள்ள நிலையில் மீண்டும் இன்று இரண்டு முறை மிதமான முறையில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை 1:30 மணி மற்றும் 4:30 மணிக்கு இருமுறை 3.6 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த தொடர் நிலநடுக்கத்தால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.