அனைவரும் இணைந்து மக்களாட்சியை பாதுகாப்போம் என்ற முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பெங்களூரில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்பது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள twitter பதிவில், பாட்னா விற்கு பிறகு மதசார்பற்ற ஜனநாயக சக்திகள் அனைவரும் ஜனநாயகம் காக்க ஒன்றிணைந்துள்ளோம். முக்கியமான இந்த காலகட்டத்தில் பாஜகவின் ஜனநாயகத்திற்கு புறம்பான உத்திகளுக்கு எதிராக நாம் அனைவரும் ஒரே அணியாக நிற்க வேண்டும்.

கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் அண்மையில் நடைபெற்ற நிலையில் அதில் பாஜகவின் பிற்போக்கு அரசியலை நிராகரித்து மக்கள் மிகவும் சக்தி வாய்ந்த முன்னுதாரணத்தை காட்டியுள்ளனர். இதனை இந்திய அளவிலும் செய்து காட்டுவோம். அனைவரும் ஒன்றிணைந்து மக்களாட்சியை பாதுகாப்போம். பெருமைமிகு நாட்டின் ஒளிமிகு எதிர்காலத்தை உறுதி செய்வோம் என்று முதல் வஸ்தாலின் தெரிவித்துள்ளார்.