நொய்டாவில் பெண் மருத்துவர் ஒருவரை கோல்டன் ரெட்ரீவர் வகையை சேர்ந்த நாய் ஒன்று முகத்தில் கடித்து வைத்துள்ளது. டெல்லியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் மருத்துவராக பணிபுரிந்து வருபவர் அன்விதா. இவர் சாட் பூஜாவில் பங்கேற்பதற்காக நொய்டாவில் உள்ள உறவினரின் வீட்டிற்கு வந்துள்ளார். பூஜை முடித்துவிட்டு அன்விதா தனது உறவினருடன் வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்தபோது அதே பகுதியை சேர்ந்த ஒருவரது வளர்ப்பு நாய் அன்விதாவின் முகத்தில் கடித்துள்ளது. இது தொடர்பாக நாயின் உரிமையாளர் மீது அன்விதா காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.