இலக்கியத் துறையில் சிறப்பாக தொண்டாற்றி வரும் பாஸ்டினா பாமாவுக்கு 2024 ஆம் ஆண்டுக்கான ஔவையார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஒடுக்கப்பட்ட பெண்களின் வாழ்க்கையை தனது அனுபவங்கள் மூலம் தமிழ் இலக்கிய படைப்புகளாகவும் ஜாதி மற்றும் பாலினம் சார்ந்து சமூகத்தில் நிலவும் சமத்துவமின்மையையும் அநீதிகளையும் எடுத்துக்காட்டும் தொகுப்புகளாக எழுதியுள்ளார். இவர் எழுதிய கருக்கு என்ற நாவல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு 2000 ஆம் ஆண்டின் கிராஸ் வேர்ட் புக் விருதை வென்றுள்ளது.