புதிய குடும்ப அட்டைகளை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் சக்கரபாணி அறிவுறுத்தியுள்ளார். அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டத்தில் பேசிய அமைச்சர், அனைத்து பொருள்களும் கடைகளில் இருப்பதை உறுதி செய்வதோடு ஒரே நேரத்தில் அனைத்து பொருட்களும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு கிடைக்கும் வகையில் ஒதுக்கீடு செய்ய வேண்டும். பணியில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.