தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் I.N.D.I.A கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சமையல் எரிவாயு விலை 500 ரூபாய்க்கும், பெட்ரோல் விலை 75 ரூபாய்க்கும் நிர்ணயம் செய்யப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தேனியில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உயிரோடு இருக்கும் வரை தமிழ்நாட்டில் நீட் தேர்வை கொண்டு வரவில்லை, நீட் தேர்வால் இதுவரை 21 பேர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர், இதற்கு மத்திய பாஜக அரசும் அப்போதைய அதிமுக அரசும் தான் காரணம் என்று உதயநிதி தெரிவித்துள்ளார்.