ஆளுநரை மாற்ற வேண்டும் என்பதற்காக பெட்ரோல் குண்டு வீசியதாக போலீஸ் காவலில் உள்ள ரௌடி கருக்கா வினோத் வாக்குமூலம் அளித்துள்ளார். 2022ஆம் அண்டு சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயம் மீது பெட்ரோல் குண்டு வீசியபோதும் நீட் தேர்வை ரத்து செய்யவே வலியுறுத்தியிருந்ததாகவும், பிஎப்ஐ அமைப்பினருக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் கூறியுள்ளார்.

பிஎப்ஐ அமைப்பை சேர்ந்தவருடன் ஒரே நேரத்தில் ஜாமீனில் வெளிவந்ததாகவும், ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசுவதற்கு முன், சிறையில் இருந்து வெளியே வந்த போது யாரையும் சந்திக்கவில்லை எனவும் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.