டெல்லியில் பூங்கா ஒன்றில் அமர்ந்திருந்த இளம் ஜோடிகளிடம் பாஜக கவுன்சிலர் ஒருவர் “தார்மீகக் காவல்” என்ற பெயரில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு டெல்லியின் சித்தரஞ்சன் பார்க் பகுதியில் உள்ள பூங்காவிற்கு வந்த ஜோடிகளிடம், அங்கிருந்த பாஜக கவுன்சிலர் அஷு தோஷ், அவர்கள் பொது இடத்தில் அநாகரிகமாக நடந்து கொள்வதாகக் கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இது பொது பூங்கா என்றும், இங்கு இதுபோன்ற செயல்களை அனுமதிக்க முடியாது என்றும் கூறிய அவர், அங்கிருந்த இளைஞர்களைக் காவல் துறை மூலம் கைது செய்யப்போவதாக மிரட்டியது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்துப் பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்துள்ளன. தனிமனித உரிமைகளில் தலையிடுவதற்கும், பொது இடத்தில் அமர்ந்திருப்பவர்களை மிரட்டுவதற்கும் ஒரு மக்கள் பிரதிநிதிக்கு அதிகாரம் இல்லை என்று சமூக ஆர்வலர்கள் விமர்சித்து வருகின்றனர்.

“>

இருப்பினும், தனது செயலை நியாயப்படுத்திய அந்த கவுன்சிலர், முதியவர்களும் குழந்தைகளும் வரும் பூங்காவில் கண்ணியக் குறைவாக நடந்துகொள்பவர்களைக் கண்டிப்பது தனது கடமை என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, தார்மீகக் காவல் என்ற பெயரில் தனிநபர்களின் சுதந்திரம் பறிக்கப்படுவது குறித்த விவாதங்கள் மீண்டும் டெல்லியில் சூடுபிடித்துள்ளன.