விஜயலட்சுமி விவகாரத்தில், வீரலட்சுமியை பற்றி தவறாக பேசியதாக அவரது கணவர் கணேசன், சீமானை தொடர்பு கொண்டு, இருவரும் boxing போடலாம் என்று முன்பு கூறியிருந்தார். அதற்கு சீமானும் ரெடி என்று கூறிய நிலையில், வீரலட்சுமி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், வருகிற தை மாதம், காணும் பொங்கல் அன்று திருவள்ளூரில் உள்ள ஒரு மைதானத்தில் boxing செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளதாக, காணும் பொங்கலன்று தனது கணவர் பாக்சிங்கிற்கு ரெடி என வீரலட்சுமி கூறியிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள சீமான், ‘என்னை எதிர்ப்பவர்கள் எல்லாம் என்னுடைய எதிரி அல்ல. நான் புலி, அவர்கள் பூனை. புலி பூனையுடன் மோதலாமா?’ எனக்கூறி பாக்சிங் விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்